மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி - ராகுல் காந்தி


மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி - ராகுல் காந்தி
x
Daily Thanthi 2024-08-01 12:06:16.0
t-max-icont-min-icon

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இது வயநாட்டிற்கும், கேரளாவிற்கும் மற்றும் தேசத்திற்கும் ஏற்பட்ட பயங்கரமான ஒரு சோகம். நிலைமையை குறித்து ஆய்வு செய்ய வந்தோம். எத்தனை பேர் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரை நிச்சயமாக இது ஒரு தேசிய பேரிடர்தான். அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி கூறியதாவது: கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு பாதிப்பால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர் என்றார்.

1 More update

Next Story