மரியுபோல் எஃகு ஆலையில் சரணடைந்த 900க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் அனுப்பட்டனர்


மரியுபோல் எஃகு ஆலையில் சரணடைந்த 900க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் அனுப்பட்டனர்
x
Daily Thanthi 2022-05-19 07:25:41.0

மே 16 முதல் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் சரணடைந்த 900க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் விசாரணைக்கு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் படுகாயங்களுடன் 51 பேர் உள்பட மொத்தம் 959 உக்ரைன் வீரர்கள் சரணடைந்ததாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

எஃகு ஆலையில் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள் மோசமாக நடத்தப்படக்கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.


Next Story