அமெரிக்க அதிபர் பைடனுக்கு சந்தனப்பெட்டி பரிசளித்த... ... உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி -  வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு
x
Daily Thanthi 2023-06-22 03:47:01.0

அமெரிக்க அதிபர் பைடனுக்கு சந்தனப்பெட்டி பரிசளித்த பிரதமர் மோடி

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சிறப்பு சந்தனப்பெட்டி ஒன்றை பரிசளித்து உள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினை கலைஞர் இந்த சந்தன பெட்டியை உருவாக்கி உள்ளார்.

இந்த சந்தனம் கர்நாடகாவின் மைசூர் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. அதில், சிறப்பான நறுமணமும் மற்றும் கலை நுணுக்கங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டும் உள்ளன.

அந்த சந்தன பெட்டியுடன், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரை சேர்ந்த வெள்ளி கொல்லர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மற்றும் விளக்கு ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்தாம் தலைமுறையாக வெள்ளி கொல்லர்களாக இருந்து வருகின்றனர்.

இதேபோன்று, பஞ்சாப் நெய், ஜார்க்கண்ட் டஸ்ஸார் பட்டு உள்ளிட்ட 10 பொருட்களும் பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.


Next Story