நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் யோகா செய்தார் பிரதமர் மோடி


நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை வளாகத்தில் யோகா செய்தார் பிரதமர் மோடி
Daily Thanthi 2023-06-21 13:34:03.0
t-max-icont-min-icon

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கோரோசி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா.சபை வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா செய்தார். இந்த யோகா நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், யோகா ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியில் சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர். 

1 More update

Next Story