உக்ரைன் போர்க்குற்ற விசாரணையில் ரஷிய ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது


உக்ரைன் போர்க்குற்ற விசாரணையில் ரஷிய ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
x
Daily Thanthi 2022-05-23 11:23:11.0

ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு நடைபெற்ற முதல் போர்க்குற்ற விசாரணையில், உக்ரேனிய குடிமகனைக் கொன்றதற்காக 21 வயதான ரஷிய வீரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைனிய நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.

வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரேனிய குடிமகன் ஒருவரை தலையில் சுட்டுக் கொன்றதாக வாடிம் ஷிஷிமரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story