கோத்தபய உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும்: சொந்த கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்


கோத்தபய உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும்: சொந்த கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்
x
Daily Thanthi 2022-07-09 09:24:30.0
t-max-icont-min-icon

இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டக்கார்கள் அதிபர் மாளிகையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால், இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே கப்பல் வழியாக தப்பிச்செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. கோத்தபய வெளிநாடு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் 16 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

1 More update

Next Story