பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன்: ரணில் விக்ரமசிங்கே டுவிட்


பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன்: ரணில் விக்ரமசிங்கே டுவிட்
x
Daily Thanthi 2022-07-09 13:32:00.0
t-max-icont-min-icon

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் வெகுண்டெழுந்தனர். இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே ஒடினார்.

இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

1 More update

Next Story