உக்ரைன் போர் சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிப்பு கவர்னர் செர்ஹி


உக்ரைன் போர் சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிப்பு கவர்னர் செர்ஹி
x
Daily Thanthi 2022-06-14 05:40:19.0
t-max-icont-min-icon

உக்ரைனில் போர் நடந்து வரும் கிழக்கத்திய நகரான சிவிரோடொனெட்ஸ்க்கிற்கு செல்ல கூடிய அனைத்து பாலங்களும் ரஷிய படைகளின் ஆக்ரோஷ தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன.

இதனை கவர்னர் செர்ஹி கைடாய் சமூக ஊடகம் வழியே வெளியிட்டு உள்ள செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷியா இன்னும் எடுத்து கொள்ளவில்லை. அதன் ஒரு பகுதி இன்னும் உக்ரைன் கட்டுக்குள்ளேயே உள்ளது என அவர் கூறியுள்ளார்.

எனினும், நகரின் 70 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில், பின்லாந்து அதிபர் சாவ்லி நீனிஸ்டோ கூறும்போது, உக்ரைன் மற்றும் ரஷியா என இரு நாடுகளும் போரில் சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.

அதிலும், உக்ரைனுக்கு எதிரான போரில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடிய தெர்மோபேரிக் குண்டுகள், கிளஸ்டர் வெடிகுண்டுகளை ரஷியா பயன்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்.

1 More update

Next Story