புச்சாவில் நடைபெற்ற அப்பாவி மக்கள் படுகொலை குறித்து உக்ரைன் விசாரணை


புச்சாவில் நடைபெற்ற அப்பாவி மக்கள் படுகொலை குறித்து உக்ரைன் விசாரணை
Daily Thanthi 2022-06-14 11:34:08.0
t-max-icont-min-icon

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர்ப் பகுதியான புச்சா அருகே கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு பொதுமக்களின் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

முன்னர் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மைரோட்ஸ்கே கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில், நடைபெற்ற விசாரணையின் போது, “துப்பாக்கி சூட்டு காயங்கள் மற்றும் கைகளுக்கு பின்னால் கட்டப்பட்ட நிலையில், ஏழு பொதுமக்களின் உடல்கள் அகழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன" என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த ஏழு பொதுமக்களின் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

1 More update

Next Story