பரபரப்பாகும் அரசியல் களம்.. நாளை முக்கிய அறிவிப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025
x
Daily Thanthi 2025-09-08 03:47:31.0
t-max-icont-min-icon

பரபரப்பாகும் அரசியல் களம்.. நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் செங்கோட்டையன்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபி கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கிறேன். அதற்குள் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும். இல்லையென்றால் என்னை போன்ற நிலையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அந்த பணியை மேற்கொள்வோம்.' என்றார்.

கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வின் இந்த பேட்டி அ.தி.மு.க.விலும், தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

1 More update

Next Story