பூமியை நெருங்கியது டிராகன் விண்கலம்

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமியை நெருங்கியது. 420 கி.மீ உயரத்தில் இருந்து விண்கலத்தின் உயரம் 320 கி.மீ உயரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.சற்று நேரத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் விண்கலத்தை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
ஜூன் 25-ல் புறப்பட்ட சுபான்ஷு சுக்லா குழுவினர் மறுநாள் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். 18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பல ஆய்வுகளை செய்தனர் சுபான்ஷு சுக்லா குழுவினர். ஆய்வை முடித்து விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பூமிக்கு புறப்பட்டனர். டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்கு, 60க்கு மேற்பட்ட சோதனை தரவுகளுடன் பூமிக்கு திரும்புகிறது.
Related Tags :
Next Story






