சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
x
Daily Thanthi 2025-10-26 04:27:49.0
t-max-icont-min-icon

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு

அரசு சிறப்பு பஸ்களை நிறுத்துவதற்கு தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதாவது, தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநோி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஐ.டி.ஐ. வளாகத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, அதே வழித்தடம் வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் சந்திப்பில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பிச் செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

1 More update

Next Story