
தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றில் கலந்த விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சுப்ரீம்கோட்டு தீர்ப்பு
வேலூர் பாலாற்றில் தோல் ஆலை கழிவுகளால் ஏற்பட்ட மாசால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவுபிறப்பித்திருந்த ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு இன்று உறுதி செய்துள்ளது. இழப்பீடு தொகையை தோல் தொழிற்சாலைகளிடம் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் தோல் ஆலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க குழு அமைக்கவும் சுப்ரீம்கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், மாநில, மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழு பாலாற்றில் தோல் ஆலை கழிவு கலப்பதை கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






