
2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர்: டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவித்திருந்தது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடரானது நாளை (ஜனவரி 31-ந்தேதி) தொடங்குகிறது.
இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து .2-வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும்.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசுகோர உள்ளது . மேலும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனையும் நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.






