
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் கைது
தென்ஆப்பிரிக்காவில் 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜுமா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். கடைகளை சூறையாடினர். கட்டிடங்கள், வீடுகளுக்கு தீ வைத்து சொத்துகளை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ஜேக்கப்பின் மகள் டுடுஜைல் ஜுமா-சம்புத்லா, எக்ஸ் வலைதளத்தில் வன்முறையாளர்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வன்முறையில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் சம்புத்லா, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story






