எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்?... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
x
Daily Thanthi 2025-11-02 07:04:46.0
t-max-icont-min-icon

எஸ்.ஐ.ஆர். விவகாரம்; அனைத்து கட்சி கூட்டம் ஏன்? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைவர்கள் முன்னிலையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். அவர் பேசும்போது, பீகாரில், பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றன. அதுபோல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என பேசினார்.

நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே என்று பேசியுள்ளார். அதனால், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்றும் பேசியுள்ளார்.

1 More update

Next Story