தெரு நாய்கள் தொடர்பான வழக்கு; தமிழக தலைமை செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
x
Daily Thanthi 2025-11-03 05:40:07.0
t-max-icont-min-icon

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு; தமிழக தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்

தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.

1 More update

Next Story