கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
x
Daily Thanthi 2025-11-03 06:56:14.0
t-max-icont-min-icon

கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில் பெண்களை உதைத்து வெளியே தள்ளிய நபர்

புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளாவின் வர்கலா ரெயில் நிலையத்திற்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது. இதன்பின்னர் இரவு 8.30 மணியளவில் வர்கலா ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.

அப்போது பொது பெட்டியில் ஆலுவா பகுதியில் 2 பெண்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்தனர். அப்போது, சுரேஷ் குமார் என்பவர் ரெயிலின் கதவு அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அவர் திடீரென அவர்களை கடுமையாக தாக்க தொடங்கினார்.

1 More update

Next Story