
“எனது நண்பர், அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுடன்...” பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பாக இரு தலைவர்களும் உயர்மட்டக்குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், திசநாயகாவும் விவாதித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “எனது நண்பர், அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுடன் அநுராதபுரத்தில்…” என்று அதில் பதிவிட்டுள்ளார். மேலும் மோடியுடன், இலங்கை அதிபர் இருக்கும் புகைப்படமும் அதில் இணைக்கபட்டிருந்தது.






