
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை - ஜெயக்குமார் பேட்டி
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான கூட்டத்திற்குப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதனை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமம் என்ற முறையில் விதிகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






