மியான்மரில் உள்நாட்டு போர், நிலநடுக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
x
Daily Thanthi 2025-04-07 13:03:58.0
t-max-icont-min-icon

மியான்மரில் உள்நாட்டு போர், நிலநடுக்கம் ஆகியவற்றால் மக்கள் பரிதவித்து வரும் சூழலில், அடுத்த வாரத்தில் நாடு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்து உள்ளது.

பலத்த காற்றுடன், இடி, மின்னல் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றுடன் கூடிய எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிவிப்பு தெரிவித்தது.

1 More update

Next Story