சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து


சிவகாசி அருகே  பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
x
Daily Thanthi 2025-10-11 11:18:00.0
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

1 More update

Next Story