
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க மாட்டேன் - ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குருமூர்த்தி, சைதை துரைசாமி பாஜக சார்பில் வராமல் தனிப்பட்ட முறையில் வந்தார்கள். தனிப்பட்ட முறையில் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் பேசினார்கள். பாஜக சார்பிலோ, அமித்ஷா சார்பிலோ யாரும் என்னிடம் பேசவில்லை.
பொதுக்குழு தேர்ந்தெடுத்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டதால், அன்புமணியின் பதவிக்காலம் காலாவதியாகி விட்டது. பாமக யாருடன் கூட்டணி என்பதையும், யார் வேட்பாளர் என்பதையும் நான் தான் முடிவு செய்வேன்.
பாமகவின் தொண்டர்களும், வாக்காளர்களும் எனது பக்கமே உள்ளார்கள். அன்புமணியை கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்க மாட்டேன். நான் தான் பாமக நிறுவனர், நான் தான் தலைவர், மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள்.
கட்சியை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி உழைக்கத் தயாராக இல்லை. அன்புமணி உழைப்பதற்கு தயாராக இல்லை என்பதால் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.






