கேரள கடற்கரை அருகே தீப்பிடித்த கப்பல்; கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி கடந்த 9-ந்தேதி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.
இந்த நிலையில், தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் தெற்கு பகுதியிலும், ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டத்தின் கடற்கரையிலும் கரை ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






