
குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.. அருவிகளில் நீராடி விரதம் தொடங்கினர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாகவும் ஆன்மிக பகுதியாகவும் விளங்கிவரும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்த வகையில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலிலேயே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வருகை தந்து புனித நீராடி மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் அருவி கரைகளில் உள்ள கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
Related Tags :
Next Story






