
தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கிண்டி, மயிலாப்பூர், சென்னை சாந்தோம், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீர் கனமழை பெய்தது. மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்னை புறநகரில் சாரல் மழையும் பெய்தது.
Related Tags :
Next Story






