
டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அஸ்வின் அதன்பின்பு என்ன செய்ய உள்ளார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா வெளியிட்ட செய்தியில், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கையோடு அஸ்வின், இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். மெல்போர்னில் நடைபெறவுள்ள போட்டியில் அஸ்வின் பங்கேற்கமாட்டார் என்று கூறியுள்ளார். இதன்படி, அஸ்வின் இன்று நாடு திரும்புகிறார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றபோதும், கிரிக்கெட் வாழ்வை அவர் முற்றிலும் துறக்கவில்லை. கிளப் அளவிலான போட்டிகளில் விளையாடி திறமையை காட்ட அவர் ஆர்வத்துடன் இருக்கிறார் என கூறப்படுகிறது.
தமிழக அளவிலான ரஞ்சி டிராபி போட்டி தொடர் போன்றவற்றில் அவர் விளையாட கூடும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.






