ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 05:07:15.0
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கத்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, இந்திய ராணுவமும், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 More update

Next Story