காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
x
Daily Thanthi 2025-12-19 07:59:28.0
t-max-icont-min-icon

காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 


காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும். செவிலியர் பணிக்கு தற்போது காலி பணியிடங்களே இல்லாத நிலை உள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். செவிலியர் பணியில் காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்” என்று அவர் கூறினார். 

1 More update

Next Story