
குரூப் 4 தேர்வு சர்ச்சை; நீதி கேட்டு பிரதமர், தமிழக கவர்னருக்கு 200 தேர்வர்கள் மனு
குரூப் 4 தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆனதாகவும், தேர்வு மையங்களில் சீலிடப்படாத கேள்வித்தாள் கட்டுகள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் எழுப்பினர்.
இதுதவிர, முனைவர் கல்வி தகுதி நிலையில் கேட்க வேண்டிய கேள்விகளை, பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் நடைபெறும் போட்டி தேர்வில் கேட்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழகத்தில் நான்கு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும், இறந்த இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 200 தேர்வர்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவர், பிரதமர், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.






