இந்தியாவின் தூய்மையான நகரில்... எலி கடித்து 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
x
Daily Thanthi 2025-09-22 05:51:15.0
t-max-icont-min-icon

இந்தியாவின் தூய்மையான நகரில்... எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரம்; பழங்குடி அமைப்பு காலவரையற்ற போராட்டம்

இந்தியாவின் தூய்மையான நகர் என்ற பெருமையை பெற்றது இந்தூர் நகரம். இந்நிலையில், அந்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்ற 2 பெண் குழந்தைகளை எலி கடித்ததும், அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவை உயிரிழந்ததும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 2 பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிக பெரிய அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு.வில், எலி கடித்தபின்பு, 2 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜெய் ஆதிவாசி யுவ சக்தி என்ற பழங்குடி அமைப்பு காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. அந்த அமைப்பினர், மருத்துவமனையின் நுழைவு வாசலின் முன் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story