
பீகார்: ஆற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற சென்று 5 பேர் பலியான சோகம்
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் கரி கோசி ஆற்றிற்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் நீரில் இறங்கியபோது, 9 வயது சிறுமி திடீரென கடுமையான நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.
இதனால், சிறுமியின் உறவினர்கள் ஒவ்வொருவராக ஆற்றில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இதுபோன்று 4 பேர் ஆற்றில் குதித்து, சிறுமியை காப்பாற்ற முயன்றனர்.
எனினும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் மொத்தம் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





