தவெக ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

கரூரில் அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்லாமல் இருந்ததாக ஆனந்த் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை முதலில் நேரில் அழைத்து விசாரிப்போம்.
நிர்வாகிகள் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் கைதாவாரா என்ற கேள்விக்கு விசாரணை ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருண்டார்.
Related Tags :
Next Story






