
சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி - அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் வகுக்கப்படுமா?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தது. இந்த அமைப்பின் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு சீனா அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக இந்தியா வந்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பிரதமரை சந்தித்து நேரில் அழைப்பு விடுத்தார். பிரதமரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.






