தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
Daily Thanthi 2025-10-31 03:34:45.0
t-max-icont-min-icon

தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதா? - பிரதமரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story