

சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா) தற்போது அகண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்த பிரமாண்டமான படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் 2 படத்தில் பாலையா கேமியோ ரோலில் நடிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், பாலையா இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாதநிலையில், இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
ஜெயிலர் 2 தயாரிப்பாளர்கள் இப்போது பகத் பாசிலை கேமியோ ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இது பாலையாவுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.