’அந்தப் படத்தை தவறவிட்டிருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன்’ - பாக்யஸ்ரீ போர்ஸ்

தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.
'I would have been very sorry to have missed it' - Bhagyashri Borse
Published on

சென்னை,

ராம் பொதினேனி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'ஆந்திரா கிங் தாலுகா'. இப்படம் வெளியாவதற்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன, தற்போது இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில், படக்குழு இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் ஹீரோ ராம், கதாநாயகி பாக்யஸ்ரீ மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பாக்யஸ்ரீ, படத்திற்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார். மேலும், இந்தப் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன் என்றும் கூறினார். அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com