மகா​பாரதப் போரில் கர்ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்திருந்​தால் ... - இயக்குநர் ஹனு ராகவபுடி


மகா​பாரதப் போரில் கர்ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்திருந்​தால் ... - இயக்குநர் ஹனு ராகவபுடி
x

பிரபாஸின் ‘பௌஜி’ படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற போர்​வீரனைப் பற்​றிய கதையே காரணம் என இயக்குநர் ஹனு ராகவபுடி கூறியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார்.’ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ எனத் தொடர்ந்து இவர் நடித்த பான் இந்திய படங்கள் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. இப்போது பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

பிரபாஸ் அடுத்து, சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பௌஜி’. இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹனு ராகவபுடி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் ஹனு ராகவபுடி “நாங்​கள் திட்​ட​மிட்டுதான் சமஸ்​கிருத ஸ்லோகங்​களை பயன்​படுத்​தினோம். போர்​வீரனைப் பற்​றிய இந்​தக் கதைக்கு அது ஆழமான பொருள் தரு​வ​தால் பயன்​படுத்​தி​யுள்​ளோம். மற்​றபடி இது புராணக் கதையை அடிப்​படை​யாகக் கொண்​டதல்ல. பகவத்​கீதையி​லிருந்து நாங்​கள் எடுத்​துக் கொண்​டது வெறும் தத்​துவ ரீதி​யான ஊக்​கம் மட்​டுமே.

‘பௌஜி’ என்​பது மனித உணர்​வு​கள், தேசப்​பற்று மற்​றும் பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் இருந்த சமூக-அரசி​யல் பதற்​றங்​களை மைய​மாகக் கொண்ட அழுத்​த​மான அதிரடி டிரா​மா. இன்​றும் உலகள​வில் அதே​போல் எதிரொலிக்​கும் உண்​மை​களை இப்​படம் பேசும். படத்​தில் பிர​பாஸ் ஒரு பெரிய வீர​ராக நடிக்​கிறார்.

‘கர்​ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்து இருந்​தால் மகா​பாரதப் போர் எப்​படி மாறி​யிருக்​கும்?’ என்ற சிந்​தனை தான் இந்​தக் கதை​யின் மையக் கரு. பிரிட்​டிஷ் கால பின்​னணி​யில் நடக்​கும் இந்​தக் கதை​யில் பிர​பாஸ் பல பரி​மாணங்​களு​டன் அசத்​தலான நடிப்பை வெளிப்​படுத்தி வரு​கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

1 More update

Next Story