சினிமாவுக்காக ஐடி வேலையை விட்டு வந்த நடிகை - யார் அவர் தெரியுமா?

அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தில் இவர் வேலை செய்தார்.
சென்னை,
மேலே உள்ள நடிகை சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்த இவருக்கு தொடர்ச்சியான படங்கள், வெற்றிகள் கிடைத்தன.
தனது அழகு மற்றும் நடிப்பால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். ஆனால் இப்போது இந்த நடிகை கம்பேக்கிற்காக காத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர்தான் பிரியங்கா ஜவல்கர்.
மாடல் அழகியான பிரியங்கா ஜவல்கர், 2017ஆம் ஆண்டு வெளியான காலா வரம் ஆயே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்சிவாலா படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் திம்மரசு, கமணம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியங்கா ஜவல்கர். அவர் கடைசியாக ’மேட் ஸ்கொயர்’ படத்தில் நடித்திருந்தார்.
நவம்பர் 12, 1992 அன்று ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்தவர் பிரியங்கா ஜவல்கர். அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்தார். நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார். பின்னர், மெதுவாக சினிமாவில் நுழைந்தார்.







