காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் சிவா தாபா தோல்வி


காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் சிவா தாபா தோல்வி
x

Image Tweeted By @BFI_official

இந்த போட்டியில் சிவா 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 5 பதங்கங்களை வென்றுள்ளது.

இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 63.5 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி இந்திய வீரரான சிவா தாபா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஆடவருக்கான 63.5 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்காட்லாந்து வீரர் ரீஸ் லிஞ்ச் உடன் சிவா தாபா இன்று மோதினார். இந்த போட்டியில் சிவா 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் அவரின் பதக்க கனவு தகர்ந்துள்ளது.

அதே நேரத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story