காமன்வெல்த் போட்டி: மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்


காமன்வெல்த் போட்டி: மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்
x

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ( 97 கிலோ) மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை சந்தித்தார். இந்த போட்டியில் வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.


Next Story