காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!


காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!
x

Image Courtesy: ANI Twitter

அரையிறுதியில் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஆண்களுக்கான (92 கிலோ) குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அஹ்லாவத் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் அஹ்லாவத் 5-0 என்ற கணக்கில் இஃபியானி ஒன்யெக்வேரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story