காமன்வெல்த் : குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் இந்தியா - பதக்கத்தை உறுதி செய்தார் சாகர் அக்லாவத்


காமன்வெல்த் : குத்துச்சண்டை போட்டியில் அசத்தும் இந்தியா -  பதக்கத்தை உறுதி செய்தார் சாகர் அக்லாவத்
x

Image Tweeted By @BFI_official

சாகர் அக்லாவத் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

7-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற குத்துச்சண்டை பெண்களுக்கான லைட்வெயிட் 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா அரையிறுதி சுற்றுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

அதே போல் ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் (இந்தியா)அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். இந்த நிலையில் ஆண்களுக்கான 92 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் சாகர் அக்லாவத், சீஷெல்ஸ் நாட்டின் கெடி எவன்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் சாகர் அக்லாவத் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் சாகர் அக்லாவத் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


Next Story