காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அபாரம்! நீச்சல் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி


காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் அபாரம்! நீச்சல் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி
x

இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்ய்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில், அவர் 54.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம்பிடித்தார். இதன்மூலம், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற பிரிவுகளில், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில், சாஜன் பிரகாஷ் 8-வது இடம்பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் 25.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.

அதேபோல, 400 மீட்டர் ப்ரீ-ஸ்டைல் பிரிவில், குசக்ரா ராவத் 14-வது இடம்பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் 3 நிமிடம் 57.45 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.


Next Story