காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : @BFI_official

இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளுள் ஒருவராக அமித் பங்கால் திகழ்கிறார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று விளையாடினார். இந்த போட்டியில் அமித், வனுவாட்டுவை சேர்ந்த நம்ரி பெர்ரியை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அசத்தலான தாக்குதலை அமித் வெளிப்படுத்தினார். இவரின் வேகத்துக்கு நம்ரி பெர்ரியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் அமித் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story