காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை காலிறுதிக்கு தகுதி


காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை காலிறுதிக்கு தகுதி
x

Image Tweeted By @Media_SAI

கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

7-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று முன்னதாக நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியாவின் முன்னணி இணை சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல், வேல்ஸின் எமிலி விட்லாக்-பீட்டர் க்ரீட் இணையை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை 11-8,11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை நடைபெறும் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ரேச்சல் க்ரின்ஹாம் மற்றும் அலெக்சாண்டர் சாக் இணையை இந்திய இணை எதிர்கொள்கின்றனர்.


Next Story