காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதி சுற்றுக்கு தகுதி


காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதி சுற்றுக்கு தகுதி
x

Image Tweeted By @Media_SAI

காலிறுதிச் சுற்றில் ஜோஷ்னா கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொள்கிறார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜோஷ்னா கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொள்கிறார்.


Next Story