அங்கன்வாடி மையங்களிலேயே எல்.கே.ஜி, யு.கே.ஜி செயல்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி


அங்கன்வாடி மையங்களிலேயே எல்.கே.ஜி, யு.கே.ஜி செயல்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 7 Jun 2022 11:04 AM GMT (Updated: 8 Jun 2022 5:55 AM GMT)

அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1-5ஆம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என தெரிவித்துள்ளார்.


Next Story