சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

கார்த்திகை பூஜையின் ஒரு பகுதியாக முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் இன்று ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சிக்கல் அருகே உள்ள பொரவச்சேரி கந்தசாமி கோவிலில் நேற்று ஐப்பசி மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் , உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






