நாமக்கல்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமண வைபோகம்


நாமக்கல்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமண வைபோகம்
x

சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி

தினத்தந்தி 27 Nov 2025 12:51 PM IST (Updated: 27 Nov 2025 5:47 PM IST)
t-max-icont-min-icon

திருமண வைபோகம் மற்றும் லட்சார்ச்சனை பெருவிழாவை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், லட்சுமி சமேத தாத்ரி நாராயண பெருமாளுக்கு ஆண்டுதோறும் திருமண வைபோகம் மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடைபெறும்.

அவ்வகையில் 74-ஆம் ஆண்டு திருமண வைபோக‌ விழாவை முன்னிட்டு கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி காலை 8 மணிக்கு சர்வத்திர திருமஞ்சனம், லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

24-ஆம் தேதி காலை திருமஞ்சனமும், 10 மணிக்கு மேல் திருமண வைபோக விழாவை முன்னிட்டு மஞ்சள் இடித்தலும் மதியம் 1 மணிக்கு மேல் அன்னப்பாவாடை மற்றும் மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு கோவில் முன்பு திருக்கொடி ஏற்றுதலும், முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு லட்சுமி சமேத தாத்ரி நாராயண பெருமாளுக்கு லட்சார்ச்சனை, அபிஷேக ஆராதனைகளும், திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் மதியம் 1 மணிக்கு திருமண வைபோக விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story